A lot to learn
TIME IS PRECIOUS
Saturday, December 14, 2019
BALA TRUPURA SUNDARI
தாலேலோ தாலேலோ (2) |
ஆராரோ ஆரிராரோ (2) | = <<<<<<<<<<<<<<<<<<
கண்மணியே, தெள்ளமுதே, கட்டிக்கரும்பே... செந்தேனே... (2)
வாழ்விக்க வந்த வாலையே... (2) வரம்பல தருகின்ற தாயே நியே !
<<<<<<<<<<<<<<<<<<
புத்தகம் கை கொண்ட வித்தகச் செல்வி , எப்பொழுதும் இங்கு நீயே துணை. (2)
அபயவரத கைகள் கொண்டு அம்மா ......
அபயவரத கைகள் கொண்டு அபயமும் வரமும் தருகின்ற தாயே !
<<<<<<<<<<<<<<<<<<
துள்ளி குதித்தோடும் புள்ளிமானே தெள்ளு தமிழே தீஞ்சுவையே (2)
அள்ளிபருகும் அமுதம் நியே அம்மா ......
அள்ளிபருகும் அமுதம் நியே ஆடி வருகின்ற பாலே தாயே !
<<<<<<<<<<<<<<<<<<
வண்ணப்பட்டாடைகள் அணிந்தவளே, எண்ணற்ற அணிகலன் பூண்டவளே (2)
பொன்தொட்டில் பட்டு விரிப்பினிலே (2)
பால் அன்னம் உண்ட களைப்பினில் உறங்கு
<<<<<<<<<<<<<<<<<<
கண்கள் மூடி கண்ணுறங்கு , கடைவிழியால் எம்மை கண்டுறங்கு (2)
காலமெல்லாம் எம்மை காத்துறங்கு (2) கண்ணே உறங்கு கண்மணி உறங்கு !
<<<<<<<<<<<<<<<<<<
பச்சைக்கிளியே கண்ணுறங்கு அனிச்ச மலரே கண்ணுறங்கு (2)
உச்சிதிலகமே கண்ணுறங்கு அம்மா ......
உச்சிதிலகமே கண்ணுறங்கு உயிரே உறங்கு உறவே உறங்கு
<<<<<<<<<<<<<<<<<<
அன்னை லலிதையின் மடி இருப்பாய் உன்னை நினைத்தாலே உடன் வருவாய் (2)
கண்ணை இமையது காப்பதுபோல் (2) எம்மை காப்பாய் உன்னடி சேர்ப்பாய் !
<<<<<<<<<<<<<<<<<<
உதிக்கும் செங்கதிர் ஒத்தவளே உத்தமியே எங்கள் புத்திரியே (2)
உவகை சேர்த்திட வந்தவளே (2) உலகை காத்திட உறங்காமல் உறங்கு !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment